Tuesday, March 9, 2010

பகவானுக்குப் படுக்கை அறைப் பணிவிடை....

பகவானுக்குப் பணிவிடைசெய்தேன் படுக்கை அறையில்....
கை கால் பிடித்து விடுவது தப்பா? - ரஞ்சிதா பரபரப்புப் பேட்டி
Tue, 2010-03-09 07:45
நித்யானந்தா செக்ஸ் லீலையில் சம்பந்தப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் நடிகை ரஞ்சிதா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இப்போது அவர் முதல்முறையாககுமுதம் ரிப்போர்டர் இதழுக்கு செல்போன் மூலம் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...
அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?
உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.
நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்
..."

உப்புச்சப்பற்ற ஊடகவிலாளர் மாநாடும் உண்மையை மூடுவதற்கான ஒப்பனைகளும்
ரஞ்சிதாவுடன் நீ படுக்கையிலிருந்தாயா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்பது தானே பதில் ஆனால் விளக்கங்களும் விசேடஅறிக்கைகளும் எதைமூடிமறைக்க?????

Thursday, March 4, 2010

போலிச்சாமியார்களின் திருவிளையாடல்கள்.

வீட்டுக்கு பூட்டு: ரஞ்சிதா தலைமறைவு
[ Thursday, 04 March 2010, ]

சுவாமி நித்யானந்தாவுடன் படுக்கையறையில் ரஞ்சிதா இருப்பது போல் வெளியான வீடியோ படக்காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரஞ்சிதா 1992-ல் பாரதி ராஜா இயக்கிய “நாடோடி தென்றல்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் “பெரிய மருது”, சத்யராஜுடன் “அமைதிப்படை”, அர்ஜுனுடன் “கர்ணா” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். “தெற்கத்தி பொண்ணு” டி.வி. தொடரிலும் நடித்தார். கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன்” என்றார். இந்த நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது. வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. நித்யானந்தாவுக்கு எதிராக சதி திட்டம் வகுத்தவர்களிடம் பணம் வாங்கி இதுபோல் நடித்து இருக்கலாம் என்கின்றனர். அவர் வெளி வந்தால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். ரஞ்சிதா மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று தெரியவில்லை. ஏற்கனவே விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைதான போது நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




ரஞ்சிதாவுடன் இருப்பதாக கூறப்படும் நபர் நான் இல்லை நித்தியானந்தா மறுப்பு
நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோவில் இடம் பெற்றிருப்பது சுவாமி நித்தியானந்தா இல்லை என்று அவரது மடம் கூறியுள்ளது. இதுதொடர்பாக நேற்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நித்தியானந்தாவின் ஆசிரமம் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோக்களையும், படங்களையும் பிரசுரிக்க பத்திரிகைகளுக்கு தடை விதிக்கக் கோரப்பட்டது. அந்த மனுவில், எனக்கு 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் உள்ளனர். இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உள்ளிட்டவற்றை அளித்து வருகிறேன். இந்த நிலையில், எனது மடத்தில் புகுந்து விட்ட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்பவர்தான் எனது புகழைக் கெடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகையுடன் நான் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை சன் டிவி திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறது. அதில் இருப்பது நான் அல்ல. எனவே இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சன் டிவி, தினகரன், தமிழ் முரசு, நக்கீரன் ஆகியோர் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாணிக்கவாசகர், தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், வழக்கை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்த அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். நித்தியானந்தாவின் ஆசிரமம் விளக்கம்... இதற்கிடையே, நித்தியானந்தாவின் ஆசிரம இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எங்களுக்கு எதிராக நடந்த கூட்டுச் சதி, கிராபிக்ஸ் வேலைகள், வதந்திகள் ஆகியவைதான் இந்த செய்திகளின் பின்னணியில் உள்ளதாக கருதுகிறோம். இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்குத் தயாராகி வருகிறோம். சுவாமிஜியின் அருள் பெற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமிஜி மீது அன்புடன் உள்ளனர். இதற்கு மேல் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை. இருப்பினும், இந்த சிக்கலான நேரத்தி்ல் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிஜியின் பின் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.



Sunday, December 20, 2009

பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......



பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......


சீடர்கள் சூழச் சிரித்தபடியே
விருந்து நாயகனின்,
பாதம் கழுவிப் பணிந்து தொழுவதாய்

பாசாங்கு செய்து
விழுந்து கிடக்குமென்
யூதாஸ் கரியோத்து...

எழுந்திரு !!!

காட்டிக்கொடுக்கும்
காரியம் முடிந்துமேன்
காலில் கிடக்கிறாய்?? எழுக நீ

எழுந்துன் முப்பது வெள்ளி
முடிச்சினைப் பெறுக!!

நீ காட்டிக் கொடுத்த
கடவுளாம் அவனக் கல்லால் அடித்தோ
கத்தியால் சிதைத்தோ, வாளால் அறுத்தோ
கொல்வதாய் இல்லையாம்...
நல்ல இனத்துத் தேக்கின் சிலுவையில்
அறைந்து கொல்வதாய் அரசனின் செய்தி

அதுவுமுனக்கு நன்மையாய்ப் போனது
எழுந்திரு யூதாஸ்

சுரணையே இல்லா மனிதர்கள் எங்கும்
எதற்கும் தலையினை ஆட்டுவர் என்பதால்
சிலுவையில் அவனை அறைந்து கொன்றபின்
இரத்தம் சிந்த இரும்பாணிகளுடன்
இறைவன் இருத்தல் தகாதெனச் சொல்லி
இறைவனை இறக்கித் தெருவினில் போட்டுச்
சில்லறைக்காக சிலுவையை விற்குக!!

தேக்கு மரத்துச் சிலுவை என்பதால்
நல்ல விலை பெறும் .

இன்றைய நாளில்
விண்ணக வேந்தனை வெற்றுடலாக்கினர்
வீதியில் போட்டுச் சிலுவையை விற்றனர்.
காணுகின்ற கண்களைத் தோண்டினர்.
தேவன் தெரு வீதியில் கிடந்தான்.
மனிதர்கள் அவனை மிதித்து
ஆளுக்கொரு திசையில்
விரைந்து மறைந்தனர்.

- ரமோனா

Saturday, December 5, 2009

ஆக்கிரமிப்பாளனே !!!













ஆக்கிரமிப்பாளனே !!!
ஆயுதமும் - உன்
அதிகாரமும்,என்னை
அம்மணமாக்கலாம்.

அந்தரித்துபோன ஆட்டுகுட்டியைப்
பந்தாடுவதைப்போல
தலயிருந்து கால்வரை - நீ
கடித்துக்குதறலாம்......

ஏகாதிபத்தியமும், எடுபிடிகளும்
கற்பித்தவாறு
மூளை,நரம்பு,நாளம் என்று
மூளச்சலவை
ஊசிகள் போடலாம்.......
மார்பு வயிறு, பெண்குறி
யாவையும்
துவேசமும், குரோதமும் கொண்ட - உன்கரங்கள்
குத்திக்கிழித்துக்
கொடூரம் புரியலாம்......

மொத்தத்தில் எல்லாவிதமான- என்
இருத்தலினையும் - நீ
இல்லாதொழிக்க
கங்கணம் கட்டலாம்!!


என் மூச்சுத் தங்கிடும்
ஒவ்வொரு நிமிடமும் - இந்த
உத்தரிப்பு ஸ்தலத்துள் - ஓர்
மண்புழுப்போன்று - எனை
நசுக்கவும்.... மிதிக்கவும்.....
உனக்கு அதிகாரமுள்ளதாய்
அதட்டி நீ பேசலாம்.

கற்களும் ,முட்களும் கால்களை இடற
நெஞ்சைப் பிளந்து.......
இறுகச் செருகிய இரும்பாணிகளுடன்
சிலுவை தோளிலே, முள்முடி தலையிலே

இதற்கும் மேலாய்
முதுகைப் பிய்க்கும்
கம்பிகட்குப்பின்
கசையடித்தண்டனை!

ஒப்பிட்டுப்பார்த்தால்
எத்தனை யேசுக்கள்!!


ஆக்கிரமிப்பாளனே!!!
இன்னும் என்ன?
செய்திகளுக்கும் கூக்குரல்களுக்கும்
திரைபோட்டு - என்
எல்லா அவஸ்தைகளையும்
உலகத்தின் கண்களில்
மறைத்துப் போடலாம்!!

மிஞ்சிபோன என்னுயிரையும் - நீ
கொன்று புதைக்கலாம்....
கண்களைக்கீறி
விலையாய் விற்களாம்....
பாகம்பாகமாய்
என்னுடம்பின் உதிரியை
உலகச் சந்தையில் சந்தைப் படுத்தலாம்.....

ஐ,நா சபையும்,மற்றும் - உலக
மத்தியஸ்த எஜமானர்களும் - உன்
வாய்ச்சவடாலில் மயங்கிப்போய்
எலும்புக்காடும் வால்களாய் - எந்தன்
இறைச்சியைத்தின்று ஏப்பம் விடலாம் .

எல்லாம் முடிந்ததாய் - நீ
எண்ணியிருக்கையில் தான்
என் மண்ணின் புல்லின் நுனிகூடப்
போரெடுத்து வாள்தூக்கும்!!!

கல்லிற்றுக் கீழே கனல் கக்கும் எரிமலைகள்!!!

துள்ளிவரும் மான் கூடத்
துவக்கெடுத்துன் கதை முடிக்கும்!!!

கல்லறைகள் வெடிக்கும்.!!!

கதைமுடித்தோமென்றிருந்த
மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!!

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.

மரணம் அவர்க்கில்லை!!!!
மனுக்குலத்து மீட்பிற்காய்
மரித்தெழுந்த யேசுவைப்போல்
ஈழத்தெருவெங்கும்......
இவர்கள் எழுவார்கள்!!!!!!!!


---ரமோனா---


உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

கருத்துக்கள்
(5) Aakkramippaalane 5.
சனிக்கிழமை, 05 டிசம்பர் 2009 12:04
(thamilini vairamuthu)
குருதி குடித்தவன் புற்று நோயில் புரளட்டும்..

பிணந்தின்னிப் பசாசுகள் 4.
ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2009 05:54
(செங்கோன்)
தமிழ் மக்களினதும், போராளிகளினதும் பிணங்களையும், மூன்று இலட்சத்திற்க்குமதிகமான மக்களின் அவலங்களையும்,போட்டுமிதித்து அதைத் தங்கள் ஏணியாக்கிக் கொண்டு அதில் சுயலாபம் தேடி உலகம் முழுமைக்கும் பவனிவந்து கொண்டிருக்கிற புலம்பெயர் சீமான்களும், சீமாட்டிகளும் நிறைந்து கிடக்கிற வேளையிது .ஆளுக்கொரு மாவீரர் நாளுரைகூட வெளியாகிக் கொண்டிருக்கிற வேதனையான சூழல். சூரிச்சில் கூடிய தமிழ்க் கூட்டமைப்பு ,தமிழர் நலன்காப்பதாகச் சொல்லி தமது நலன்காக்கப் பாராளுமன்றத்திற்கும் அது போடுகிற பிச்சைப் பதவிகளுக்குமாக பயணிக்க நிற்கிறது. அதற்காக ஒட்டுமொத்த தமிழர் இனத்தையுமே அழித்துவிடத் தயாராகி வருகிறது. .இதற்குள் நல்லவற்றை எப்படிக்கண்டடைவது என்பது கேள்விக்குறியாகிறது. நான் இப்போது நின்று கொண்டிருக்கிற எம்பசி கிறாண்டில் (Embassy Grand) கூடிய மக்கள் முகத்தில் எந்த விமோசனமும் தெரியவில்லை.விமோசனம் எங்கிருக்கிறது என்று அறியவும்,அதற்காக நின்று நிதானித்துச் சிந்திக்கவும் கூட அவர்களால் முடியவில்லை.அரத்த மாவை அரைப்பதும்,துவைத்த துணியைத்துவைப்பதும் தான் தமிழர்கள் வேலையா ?என்ற கேள்வியைக்கூடக்கூட்டமைப்பு பேச்சாளியிடம் கேட்க முடியவில்லை. நம்பிக்கை தரும் வாசகங்கள் எதுவும் அவரால் வைக்கப்படவுமில்லை.ஆனாலும்

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.
மரணம் அவர்க்கில்லை!!!!

என்ற உங்களது நம்பிக்கையைப் போலவே எம் எல்லோர் ஆதங்கமும். தேய்ந்த தமிழினம் திருந்துமா?????????

அபூபக்கர்களும்,அமாவாசையும் 3.
சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 18:07
(சேனாதி)
இப்படித்தான் ஆளுக்காள் பல்லவி பாடி தமிழினத்தைக் குட்டிச் சுவாராக்கி வைத்திருக்கிறீர்கள்.
கும்புடிப்பூண்டிக் காம்பில கொடியேத்தின புண்னியவான் களைப் போலத்தான் புலத்துப் புண்ணியவான்களும் பிழைக்க வழிதேடி பலபுனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கினம். இப்ப கவிதையும்,கப்பியங்களும்,உங்க பேச்சுமில்லை முக்கியம். காம்பில சீரழிகின்ற மக்களுக்கு ஒரு தீர்வுகாணுங்கோ, அல்லது தீர்வுகணாவிழைகின்ற நாடுகளையாவது விடுங்கோ?
செத்தவை பிறகெழும்பி வந்தென்ன செய்யப்போகினம். அதுதான் மொத்தமாய் எல்லாம் சுடலையாய் போச்சே???அபூபக்கருக்கும்,அமாவாசைக்கும் என்ன சம்பந்தமோ அதுபோல்த் தான் எல்லாம் தெரிந்ததாய் கவி வடிக்கிற நீங்களும்.

மாவீரர்கள் மறுபடியும் பிறப்பார்கள் 2.
சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 17:37
(நேசன்)
சீமானை வெளியேற்றி விட்டார்களே என்று மனம் கனத்த வேளையில் தான் ஈழ நேசனைப் பார்க்க நேர்ந்தது.தமிழர்களாகிய எமக்கு என்ன நடக்கிறது. எவ்வளவு அவமானங்கள். ஏன் இப்படி?? ரமோனாவின் கவிதை சொல்வதைப் போல் மரித்தெழுந்த யேசுவைப்போல மனுக்குல மீட்பர்களான எம் மாவீரர்கள் மறுபடியும் பிறப்பார்கள். உறுதி எடுப்போம். வீர வணக்கங்கள்.
நேசன்

கதைமுடித்தோமென்றிருந்த மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!! சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 17:18
(தேவா பாலசுந்தரம்)

கல்லிற்றுக் கீழே கனல் கக்கும் எரிமலைகள்!!!
துள்ளிவரும் மான் கூடத்
துவக்கெடுத்துன் கதை முடிக்கும்!!!

கல்லறைகள் வெடிக்கும்.!!!

கதைமுடித்தோமென்றிருந்த
மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!!

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.
மரணம் அவர்க்கில்லை!!!!
அற்புதமான வரிகள்.மாவீரர் நாள் கவிதை ஈழத்தவர்களின் மனக்குமுறலைவெளிப்படுத்தியுள்ளது. ரமோனாவிற்கும், ஈழநேசனுக்கும் வாழ்த்து.

Sunday, November 8, 2009

தேவதைக் குஞ்சே!!!

மிகுந்த சர்ச்சையை ஏற்ப்படுத்திய இக்கவிதையை ஈழநேசன் இணைய வலை பிரசுரித்திருந்தது. இணைய வலை முகவரி www.eelanation.com



தேவதைக்குஞ்சே.....
மூக்கும் முழியுமாய்
தமிழ்மொழி பேசும்
அழகுச் சிட்டே !!!

நீ ஏன்
இங்கு வந்து
பிறந்து தொலைத்தாய்...

கன்னங்குழி விழ
தத்தி நடந்து மழலை பேசிடும்- உன்னைச்
சிதறடிக்கப்போகிறது
இந்த மண் !!!

உன் பஞ்சு மேனியைப்
பாளும் குண்டு தின்று தீர்க்கவும்...
செல் துண்டு உந்தன் தலையினைப் பிளக்கவும்...
வல்லுறவில் நீ வதைபட்டுப் போகவும்...
விதி உனக்காய் விதிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றிற்கும், தப்பி நீ உயிரோடிருந்தால்
எஜமான்களின் எடுபிடியாகவும்,
மனித வெடிகுண்டுப் பொட்டலமாகவும்
மாறப்போகிறது உன் மழலை உடல்.

எப்படியோ உனக்கு ஒரு
கொடூரம் இந்த மண்ணில்
எழுதப்பட்டிருகிறது .

எல்லோரையும் போலவே
வீரிட்டழுதபடி விழுந்த - உனக்குத்
தமிழ் என்று பெயரிட்டுத்
தரணி அழித்த பரிசு இதென்று
சந்தோசப்படு !

காடு தீப்பற்றி எரிகையில்
கேட்பாரற்றுக் கருகிப் போகிற - சிறு
புல்லாய் இருக்கிற பிஞ்சுக் குருத்தே!!
இந்த மண்ணில்
இன்னும்
ஏன் வந்து பிறந்து
தொலைத்தாய்???


துராகமெது,சத்தியமெது
என்று சுயம் தேட முற்பட்டுச் செத்த
உன் முன்னோர்கள் போலவே
இறப்பதற்கு முன்னாடியுள்ள
கடைசி நிமிடங்களில்
எதுவும் புரியாமலே
உன்
எஞ்சியுள்ள இரத்தத்தையும் -இப்
பூமிக்கிறைத்து விட்டுப் போ.


அறிவையும்,தன்னம்பிக்கையையும் -உன்
மண்டையிலிருந்து பிடுங்கிவிட்டு அதை
அடிமை எனும் மண்போட்டு
நிரப்பி விடத்துடிகிறது
அதிகாரம்.

இனி
உன் தலையிலும் கொம்பு முளைக்க
வேண்டுமென நினைப்பது வீண் !!!

மயிர் நீத்தால் உயிர்வாழாதாம் கவரிமான்.
உனக்கு மயிர் மட்டுமா போயிற்று???

உனக்குள்ளிருக்கும்
சத்தியத்தின் குரலைக்கேட்பவன் - எவனும்
இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லைத்தாயே !

இன்னமும்
உனக்கென உன்முன் கிடக்கிற
உன்னதங்கள் எது?

சுடலையில் நடக்கவும்,
சுடு மண்ணுள் படுக்கவும்,
குருதியில் குளிக்கவும்,
பட்டினிகிடந்து பயந்து
தவிப்பதற்கும் மட்டுமே
உன்பிஞ்சு உடல் படைக்கப்பட்டதெனில் -நீ
இருந்தென்ன?? செத்தென்ன??

சாவைவிடவும் பிழைத்தலே மேலெனில்
சாவைவிடவும் மோசமான பிழைத்தலை
உனக்கென்று எழுதிவைத்தது எது ?????

உனக்கெதிரான - எல்லா
அனியாயங்களிலும்,
ரகசியங்களிலும் - உன்
விடுதலையும், வாழ்வும்
புதைந்திருப்பதாக
இப்போதும் சொல்லும்
அயோக்கியர் முகத்தில்
உன்னிடம் இன்னும்
எஞ்சிக்கிடக்கிற உமிழ்நீரைக்
காறி உமிழ்ந்துவிட்டு கண்மூடிப் போ !!



- ரமோனா


உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி


உன் தேவதைக் குஞ்சுக்கு என்ன
முலைப்பாலா? மூத்திரமா? ஊட்டி வளர்க்கிறாய்
அய்ம்பத்தி எட்டில் பாணந்துறையில்
ஐயரைக் கோவிலில் போட்டு எரித்தவன்
இந்தப் பொழுதில் ஒரு மன நோயாளியை
கடலில் கரைத்தான்..


பொல்லாலும் தடியாலும்
போட்டு அடித்த அந்தப்
பொல்லாத சாதிக்கு என்ன
பூட்டா இருக்கிறது..?


இந்த இரண்டு கொலைகளுக்கும் இடையில்
அய்ம்பது ஆண்டுகள்..


இராசபக்சா இராட்சதர்களை
உரசி வளர்த்துவிட்டு இப்பொழுது
சரத் பொன்சேகாவால்
சரிபார்க்கிறது இந்தியம்..


அம்மா தாயே..
இராட்சதர்களுக்கு இறப்பில்லை...


அதனாலேதான் நாம் இன்னும்
அடிமைகளாய்..



விலங்கு ஒடிப்பது என்து விளையாட்டு அல்ல..
ஒருபக்கம் கெட்டவர்கள் இருபக்கமும் எட்டப்பர்கள்..


உனக்குத் தெரியுமா?
வியட்னாம் யுத்தம்..


அம்மணமாய் அந்தச் சிறுமி..
வீதி நீட்டுக்கு ஓடும் காட்சியைக்
காணும்வரை
அமெரிக்கர்கள் அழவில்லை..


சிறுமியைப் பார்ததபின்தான்
செல்லரித்தது சமூகம்..


ஒன்றேமுக்கால் இலட்சம் இராணுவம்
வியட்னாமில் இருந்து
இழுக்கப்பட்டார்கள்...


அந்தச் சிறுமி யார்தெரியுமா?
வெள்ளை தேசங்களில்
மனிதநேய மகத்துவமாய்..இப்பொழுது
புனிதம் காட்டும் ஒரு புண்யவதி..!


அய்நா மன்றமும் அணிநாடுகளும்
ஆதரித்து எடுத்து
அறிவார்ந்தவளாய் ஆக்கியிருக்கிறது..


பகலில் மறைந்து இரவில் வெடித்த
எரித்திய மண்ணுக்கு
ஆயிரம் செங்கடல் நீளத்திற்கு
எலும்பும் தோலுமாய் நின்று ஒரு
இளைத்த ஒருசாதிதான் இன்று
சுதந்திரம் பேசுகிறது..


பிலிப்பைன்ஸ் எப்படிப்
பூத்தது சுதந்திரம்..


சிறையில் இருந்து வெடித்து வந்தான்
சுதந்திர வீரன்..அக்கினோஸ்


பூட்டிய சிறையும் பொடிப்பொடி ஆனதே..!


ஏழையாய் இரு..கோழையாய் இராதே!
வாளில்லை என்றால் வீரமா போகும்..
எரியும் நிலத்தில் ஈரம் போகுமா?
அரக்கம்தான் ஆட்சி..வரும்பார் மீட்சி..


ஓ..சாகப் போகிறாய் என்றா
வேகிறாய் நீ..?


இட்லர் எரித்த
அய்ம்பது அய்ம்பது இலட்சம்
தொலைந்த பின்னும்
யூதம் அழிந்ததா?


பீனிக்ஸ் பறவைகள் சாகாது அம்மா!
சாம்பலில் இருந்தும் உயிர்த்து வரும்..

இன்று அல்லது நாளை அல்லது
நாளை மறுநாள்..


எங்கோ இருந்தும் எங்கள்மண்
சுதந்திரம் பேசும்..


அந்நியன் கையில் அடிமையாய் இருப்பவனைவிட
தன்னின மண்ணுக்காய்ச்
சிந்திய உடலுக்குச் சிறப்புண்டு தாயே!


முப்பதினாயிரம் மாவீரர்கள் அல்லவா..?
நீமட்டும்..சாவதற்கு உன்மகளைச் சபிக்கின்றவளாய்..


நாளை உன்னதும் மரணம்..உன்
குஞ்சினதும் மரணம்.. கூட அந்த
நிலத்தின் மடியில் ஒரு மாலையில் எரியலாம்..


ஆனால் விடியலின் மண்ணில்
உன் சாம்பல் ஆயிரம் பூக்களாய்..


இல்லையேல்..
உன் குஞ்சுத் தேவதை
வஞ்சியாய் வனிதையாய்..
பெண்ணினம் போற்றும்
பூக்களாய் விரிவாள்...



மண்ணில் வாழ்வதும்
மண்ணில் மடிவதும்
மண்ணுக்காய் வாழ்வதும்
மண்ணுக்காய் மடிவதும்..
குருதியில் எழுதிக் கொண்ட இளைஞர்கள்
சுருதியாய்த் தமிழர் தேசங்கள் எங்குமாய்..


விடியலுக்கான ஒருமண்..அந்த
வேதத்தில் விளைந்தால்
இறப்புகள் என்பது சரித்திரமாகும்..
இனத்தின் விடுதலை வரலாறெழுதும்..



மண்ணில் இறப்பினும்
மரணமே சிறக்கும்..!
-தீவேரா

சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து வெளிப்படுகிற முனகல் ஐயா. அந்தக்கவிதை!
1 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 13:00
ரமோனா
நன்றி ஐயா,உங்கள் பதில் கடிதத்திற்கு.
வனப்பான வீடுகளில்,வளமான வசதிகளோடு,சொகுசுக்கார்களிலே அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ
இருந்து கொண்டு என்கவிதையைப் படித்து அதற்குப் பதிலும் எழுதிய
உங்களுக்கும்,உங்கள் தமிழ்பற்றிற்கும் தலைவணங்குகின்றேன்.
அந்தக்கவிதை கம்பிகளுக்குமத்தியில் சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து
வெளிப்படுகிற முனகல் ஐயா. நீங்கள் கவியில் சொன்னதைபோல பசியாலும் பட்டினியாலும்
முலைப்பாலும் கூட வராத சோகம்.மூத்திரத்தைகூட பருக்கலாமா ?அல்லது பருகலாமா?என்று அங்கலாய்க்கிற கையறுநிலைப் பொழுதுதான் ஐயா அது..
58ல் ஐயர் எரிக்கப்பட்டதைச் சொல்லவருகிற தாங்கள் அண்மைக்காலத்தில் நடந்து முடிந்து போன இன அவலத்தைப்பற்றி ஏன்ஐயா மௌனம்? நீங்கள் சொல்கிற ஐ.நா சபையும், அதனால் பயிற்றுவிக்கப்பட்ட வியட்னாமியப் பெண்ணும் இப்பாதகம் நடக்கும் போது பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏன் அகில உலகமும் தான். நம்பிக்கைகள் சிதைந்த போது எழுந்த கவிதை அது. யாரையும் புண்படுத்தவென எழுதவில்லை. நான் ஈழவிடுதலைக்கு எதிரானவளல்ல. தாய்மையின் கடமையும் அதனைப் போல் முக்கியம் என்றெண்ணுபவள் நான்.
அடிமையான வாழ்வைவிட சாவது மேல் என்பது தான் தேவதைக்குஞ்சூடாக நான் சொல்ல விளைந்தது. இப்போதைக்கு உங்கள் குஞ்சுகள் எல்லாம் மாற்று நாட்டுக் குடியுரிமையில்
மகிழ்வாக இருப்பதானால் என்னைப்போல் நீங்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.மண்ணில் இறப்பினும் மரணம் சிறக்கும் என நீங்கள் புலம் பெயர் மண்ணில் இருந்து வழங்கியிருக்கும் கவிச் சான்றிதழை நான் மகிழ்வோடு ஏற்றுகொள்கின்றேன்
ரமோனா






பதிலுக்குப்பதில்.
2 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 22:28
தீவேரா
இன்னுமொரு பதில்..

ரமோனா!


ஐயர் கொலை ஒரு ஆரம்பம்.
பம்பலப்பிட்டிக் கடற்பறி இன்றானது
இடைவெளியைச் சொன்னபோது
படைக்கொடுமையும் நீ பார்த்துத் தானே..
ஆகவேண்டும்..


சொல்லித்தான் தெரியணுமா என்ன?
இங்கே..உலகத்தில்..
பதினாறு பேர் தீயில் எரிந்தார்கள்.. இல்லையில்லை
தம்மைத் தாமே எரித்தார்கள்..
வெளிநாடு சொர்க்கமில்லைத் தாயே..!


புளியோதரையும் பொரித்த(மீனும்) செத்தலும் கிடைக்கிறதுதான்..

இறந்தவர்கள் இலட்சமல்லவா?
இதை நீ எழுதித்தான் தெரியணுமா?


சும்மாவல்ல உலகப்பந்தில் ஒவ்வொரு தமிழனும்
கருகி வெந்தான்..
புலிகளைத் தெரியாதவர்கள் இவர்கள்..
இலட்சத்து இளைஞர்கள்
ஓடும் வேகக் கார்களைப் பாதையில் மறித்தார்கள்..


எல்லாம் எம்மண்ணின் தாயருக்காக..?
நாங்கள் சடங்கள்..
நம்மண் பறிபோகிறது..
எட்டப்பன் குட்டியோடு தின்னுகிறான்

எங்கள் கை இனத்துக்காய் நீளுகிறது..
எழியவன் விடுகிறான் இல்லை..
அதுமட்டுமா..?
அரசநக்கர்களால் அவலப்படுகிறோம்..

உன்முகாமுக்குள் வர..
உங்கள் பா.ஊக்களுக்குப் பார்வையில்லை
அய்நாவுக்கு அனுமதியில்லை..
எட்டப்பன் மட்டும் இங்கிலாந்தில் இருந்து
அழைக்கப்படுகிறான்..போதாக்குறைக்கு கழியர்நிதி.


தேனும்பாலும் ஓடுகிற திருமதுரை என்றல்லவா
இந்தியத் தீய எட்டப்பன் திருக்கதை விடுகிறான்..


போய்வந்தால் பறுவாயில்லை..
திண்டதிற்குத் தக்கதாய் ஏப்பம் விடுகிறான்..


தூளியிற் தாலாட்டோடு நீயும் இல்லை
நாங்களும் இல்லை..


பெற்றவர் இல்லாத பிள்ளைகள் கொஞ்சமா..?
உற்றவர்க்கு நோகாமல் இனம் இருக்கிறதா?


இனத்தின் கெட்டவர் யார்?
பாராளுமன்றத்தில் தமிழ் இனத்திற்காகப்
பரிதவித்தவர்களைப் பார்த்துப் பார்த்துச்
சுட்டானே ஒருவன்..
ஏன்?

இவன் பல்லக்குச் சரிந்துவிடும் என்பதாற்தானே..?
இவன் பார்த்துப் பார்த்து அப்பாவிகளைத்
தெருவில் சுட்டவன் அல்லவா?

இந்துக் கோவிலை புத்தபிக்கு ஏறி அடித்தான்..
எத்தனை பாதிரிகள் சிலுவையில் செத்தார்கள்..
இவர்கள் உயிர்த்தெழ முடியாதபடி இன்னமும்
சாத்தான்கள்..

இப்பொழுது எங்களுக்கு வலிமை இல்லை..
வாழ்நாள் முழுவதும் சாக்கள் தான்?

இங்கே இருக்கிற ஒவ்வொரு
ஈழத்தமிழனுக்கும் ஒன்றல்ல பத்துவரையான
உடன்பிறப்புக்கள் கொலை செய்யப்பட்டார்கள்..

உனக்கும் வேதனைதான்..
எனக்கும் வேதனைதான்..

அதற்குப் பரிசாய் எம்நாடு
எழும்.. எழுதப்படும்..

அதுவரை நீயழுதும் பயனில்லை..
நானழுதும் பயனில்லை..

இராட்சதர்கள்
பேத்தைகளாய்..
எட்டப்பர் அட்டதிக்கும்..

உன் தொட்டிலுக்குத் தாலாட்டு
தேசங்கள் உனக்குத் தரும்..
அதுவரை நாங்களும் உறங்கோம் தாயே..!



Srilanka der ganze Politiker sind sehr schlecht.
4 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 14:15
Sathees
dieses Gedicht ist sehr gut. Srilanka der ganze Politiker sind sehr schlecht. Ich weiß, dass ein Ding srilankan Tamilisch nicht gute Zeit ist.
sathees

/////////////////////////////////////////////////////
This poem is very good. All the srilanka politicians are very bad. I know this is not good time for Sri lanka tamils.
Sathees
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலி!
3 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 13:55
செங்கோன்
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலிகளைத்தான் இக்கவிதையில் காண்கின்றேன்.எலிப்பொறிகளைவைத்து யானைப்பிடிப்போமென்ற வாதங்களை மாற்றீடு செய்து
புதியபரிமாணங்களில் சிந்திக்க,செயலாற்ற வேண்டிய பல தேவை அனைவருக்கும் உண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் என வீண்ஐம்பம் பேசவல்ல நேரம் அல்ல இது.
செங்கோன்
கொலைகாரன் யார்? தெரியாமல் ஒரு கவிதை..!
2 திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009 14:23
மனிதன்
அறுபது வருடங்களாக இனக்கொலை செய்யும் ஆட்சியை
யார் வெல்வது? எப்போது..?
நீ எழுதும் இந்த எழுத்துகளின் சமநேரத்தில்..
மனவழுத்தம் கொண்டவனை கட்டையால் அடித்துக்
கடலிற் கரைத்தார்களே..? ஏன்
அங்கே என்ன களத்தில் புலிகளா? நின்றார்கள்..
அடிமை விலங்கொடிக்காதவரை..
மிடிமை போகாது தாயே..!..
உனக்கு மீட்சியில்லை என்றால்
உன் பிள்ளைக்கும் இல்லை பெண்ணே..
உன் பிள்ளை அரசாளும் காலம்வரும்.. அழாதே!
யதார்த்தம் பேசுகிற கவிதை!
1 திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009 13:48
பாலன்
யதார்த்தம் பேசுகிற கவிதை.அழகான வரிகள்.மனதைத் தொடுகிற படம்.
வளர்க உங்கள் இணையம்.
வாழ்த்துக்களோடு.....
பிற்ஸ்பேர்க்கிலிருந்து...... பாலன்


Srilanka der ganze Politiker sind sehr schlecht. தேவதைக் குஞ்சே
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலி! தேவதைக் குஞ்சே
சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து வெளிப்படுகிற முனகல் ஐயா. அந்தக்கவிதை! ரமோனாவுக்கு ஒருபதில்!
கொலைகாரன் யார்? தெரியாமல் ஒரு கவிதை..! தேவதைக் குஞ்சே
யதார்த்தம் பேசுகிற கவிதை! தேவதைக் குஞ்சே

Saturday, October 31, 2009

மகிந்தவிற்கு மலர்மாலை போட்டு மகிழ்கிறது இந்தியா???

கும்பிடக் கும்பிடக் கொழும்பில் அடிவாங்கிக் கரையொதுங்கிக் கிடக்கிறது தமிழரின் மானம்...குத்துவிளக்கேற்றிக் குடம்குடமாய் பால் சொரிந்து மகிந்தவிற்கு மலர்மாலை போட்டு மகிழ்கிறது இந்தியா???

Wednesday, October 28, 2009








நான்...
எப்போதும் போலவே
இப்பொழுதும்...

**தகடூரை அண்டிய அதிகமானின்
நெல்லிக் கனிக்காய்
அலைந்து,அலைந்து....
அங்கிருந்து இங்கும்,
இங்கிருந்து அங்குமாய்...

என்மனதிற்கும், எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!!

"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாம்"

பிணமலைக்குவியலின்,
சரிவுப்புறத்தில் ஒழிந்து
உயிர்தரித்தும்...

குருதி சேற்றுப் படிவினுள்
கால்கள் புதையப்புதைய
ஓடிய பொழுதிலும்...
இரவுபகலாய் எமனாய் விழுகிற
செல்லும்,துப்பாக்கி வேட்டும்,
மாடு குடிமனை மக்களின்
மேலாய் வெடிக்கிற போதிலும்...

ஒரே ஒரு கணத்துள் - என்
துணயாய் வந்தவன்
மண்டை பிளந்துயிர்
மரிக்கிற போதிலும்....

குருட்டுப் பிடிமானத்தோடு - என்
நெஞ்சு முனகும் !

"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாம்"

நான் எப்போதும் - போலவே
இப்போதும்....

என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான் !

கண்ணுக்கெதிரே,
கசக்கிமுகர்ந்து
பொசுங்கிப் போன - என் தமிழ்ப்
பெண்களை....
பச்சைக்குழந்தையின்
பிஞ்சுக் கழுத்தையும்
நசித்துயிர் மாய்த்த
அரக்கத் தனத்தை....
சேலை இடுக்கில் கத்தி சொருகி
மார்பினை அரிந்த
மாபாதகத்தை....

மண்ணினுள்ளே ஆளப்புதைந்தும்..
இறப்பரில் புகைந்தும்..
துடிக்கத்துடிக்க மரித்துபோன
உயிர்களை நினைக்கையில்
உஸ்ணப்பெருமூச்சோடு -என்
குரல் ஒலிக்கும்.

"ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லும்"

நான் எப்போதும் போலவே
இப்போதும்.....

அங்கிருந்து இங்கும்...
இங்கிருந்து அங்குமாய்...
என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும் மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!

- ரமோனா


நான் எப்போதும் - போலவே
இப்போதும்....

என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான் !

கண்ணுக்கெதிரே,
கசக்கிமுகர்ந்து
பொசுங்கிப் போன - என் தமிழ்ப்
பெண்களை....
பச்சைக்குழந்தையின்
பிஞ்சுக் கழுத்தையும்
நசித்துயிர் மாய்த்த
அரக்கத் தனத்தை....
சேலை இடுக்கில் கத்தி சொருகி
மார்பினை அரிந்த
மாபாதகத்தை....

மண்ணினுள்ளே ஆளப்புதைந்தும்..
இறப்பரில் புகைந்தும்..
துடிக்கத்துடிக்க மரித்துபோன
உயிர்களை நினைக்கையில்
உஸ்ணப்பெருமூச்சோடு -என்
குரல் ஒலிக்கும்.

"ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லும்"

நான் எப்போதும் போலவே
இப்போதும்.....

அங்கிருந்து இங்கும்...
இங்கிருந்து அங்குமாய்...
என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும் மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!

- ரமோனா

குறிப்பு:
**தகடூர்: அதிகமான் மன்னன் அரசாண்ட இடம். அதிகமான் நீண்ட காலம் உயிர் வாழும் சக்தி கொடுக்கும் நெல்லிக்கனி பெற்றவன்.

கருத்துக்கள் (3)
ஆயுதமொன்றே..
3 செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2009 12:36
ஈழவன்
உன்னைப் போலவே நானும்..
இன்னும் எரிகிற இனத்தில்
இறந்து கொண்டிருக்கிற வனத்தில்
என்ன செய்யப் போகிறோம்
ஏவுகணையும் எரிகுண்டும் இல்லாத போது..!

உன் கவிதையோடு ஈழம் வெல்லும்.
nettes Gedicht !
2 திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2009 14:42
sathees
nettes Gedicht Ramona.
erhält es aufrecht.
danke
அற்புதமான கவிதை !!
1 திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2009 14:16
செங்கோன்
"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாமா? --அல்லது
ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லுமா??

உண்மையில் ஒவ்வொரு இலங்கைத் தமிழனுக்குள்ளும் இன்றுவரை அறிந்து கொள்ள முடியாதிருக்கின்ற அல்லது புரிந்துகொள்ளமுடியாதிருக்கின்ற அர்த்தமுள்ள கேள்வி இது.. அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்.