Friday, April 2, 2010

ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற கவிதை அல்லது வதை

ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற



பெரிய வெள்ளிச் சிறப்புக் கவிதை அல்லது வதை:



பயணமுகவர்கள்



கொடுமையணிந்து

தினம்….தினம்…

வருகிறது பெரியவெள்ளி !!!!!





சிலுவையின்றிச்


சாகடிக்கப் படுகிறார்கள்


புதுப் புது யேசுக்கள் !!!!






ஓளிபாய்ச்சி


உயிர்த்தெழுந்திருகின்றன


உலகப் பெருந்தெருக்கள்.






புரியாத மொழி……


புரியாத ஊர்……….


புரியாத மனிதர்கள்……


ஈஸ்டர் தினத்திற்கு


முன்னிரவொன்றில்--நான்


அவனுடன் அந்த


அறையினுள் நுழைந்தேன்.






‘பொலிஸ் வந்தால்


புருஸன் என்று


ஏன்னையே சொல்"






மீசை மயிர்கள்


முகத்தில் உரச


நெருங்கி அமர்ந்தான்


அவன் முடிவெடுத்து விட்டான்






மூடிய கதவுக்குள்-எது


நடந்தாலும் வெளியே வராதென….






இனிச் சட்டையைக் கிழிக்கலாம்….


வாரினால் அடிக்கலாம்………


எச்சிலால் துப்பலாம்……….


பரிகாசப்படுத்தலாம்………..





இயேசுவைப் போலவே

பாடுகள் படுத்திக்

கொன்றும் போடலாம் .




இது பயணமுகவர்கள் காலம்





அதிஸ்டம் தேடி


அதிஸ்டமாய் வந்து


அதிஸ்டம் தொலைக்கிற


சீதைகள்!!!!!!!


முகவர்கள் வெட்டும்


இடுகாட்டுக் குழிகளில்…….