Tuesday, March 9, 2010

பகவானுக்குப் படுக்கை அறைப் பணிவிடை....

பகவானுக்குப் பணிவிடைசெய்தேன் படுக்கை அறையில்....
கை கால் பிடித்து விடுவது தப்பா? - ரஞ்சிதா பரபரப்புப் பேட்டி
Tue, 2010-03-09 07:45
நித்யானந்தா செக்ஸ் லீலையில் சம்பந்தப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் நடிகை ரஞ்சிதா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இப்போது அவர் முதல்முறையாககுமுதம் ரிப்போர்டர் இதழுக்கு செல்போன் மூலம் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...
அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?
உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.
நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்
..."

உப்புச்சப்பற்ற ஊடகவிலாளர் மாநாடும் உண்மையை மூடுவதற்கான ஒப்பனைகளும்
ரஞ்சிதாவுடன் நீ படுக்கையிலிருந்தாயா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்பது தானே பதில் ஆனால் விளக்கங்களும் விசேடஅறிக்கைகளும் எதைமூடிமறைக்க?????

1 comment:

Unknown said...

கும்பமேளாவில் சாமியாம் என்று வந்துள்ள சாமியள் கதைவிடுகினம். இன்னும் மூன்று நாளில் தெரியும் என்றால் என்னதெரியும்.முக்கியமான ஊடகக்காரர் வந்தும் சாமிமார் எந்தப் பதிலுமில்லாமல் தப்பினாக்காணும் எண்டு ஓடுகினம் என்றால் ஏதோசங்கதி இருக்குப் போல.....
cronicle

Post a Comment