Tuesday, March 30, 2010

இந்தியப் பேய்களிடம் சிக்கிச் சிதறிச் சின்ன பின்னாமான ஈழத்துப் பெண்.

இந்தியப் பேய்களிடம் சிக்கிச் சிதறிச் சின்ன பின்னாமான ஈழத்துப் பெண்.




ஈழநாட்டில் வாழமுடியாது அகதியாக தமிழகம் வந்த திருமணமான பெண்ணை காவற்துறையினர் கற்பழித்த கொடூரம்...............
பாரத மாதாவின் மாண்புக்கே நேர்ந்த அவமானம் பற்றி தமிழகம் அமைதியாய் இருப்பது அழகாகுமா?



வாழமுடியாது தவித்து வந்த ஏதிலியான ஈழப் பெண்ணை வல்லுறவு செய்ய எங்கனம் மனம் வந்தது?


"தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

நகர்காவலர் என்ற போர்வையிலிருக்கும் நயவஞ்சகர்களின் கொடுமை:






பொலிஸ்நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.






பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.






தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டுக் கொன்று விடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்துள்ளார்"




ஏதிலித் தமிழ்ப் பெண்ணின் உயிரையே குடிக்கும் பேய்களாகினர் காவல்த்துறை அதிகாரிகள்?

கொடியவர்களிடம் இருந்து பாதுகாப்புத்தேடி தமிழகம் வந்தால், தமிழகத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர்களே கொடியவர்களாக இருப்பது கொடுமையோ கொடுமை!!!




இதுதான் கருணையில்லா நிதியின் சட்ட ஒழுங்கா??

No comments:

Post a Comment