Friday, April 2, 2010

ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற கவிதை அல்லது வதை

ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற



பெரிய வெள்ளிச் சிறப்புக் கவிதை அல்லது வதை:



பயணமுகவர்கள்



கொடுமையணிந்து

தினம்….தினம்…

வருகிறது பெரியவெள்ளி !!!!!





சிலுவையின்றிச்


சாகடிக்கப் படுகிறார்கள்


புதுப் புது யேசுக்கள் !!!!






ஓளிபாய்ச்சி


உயிர்த்தெழுந்திருகின்றன


உலகப் பெருந்தெருக்கள்.






புரியாத மொழி……


புரியாத ஊர்……….


புரியாத மனிதர்கள்……


ஈஸ்டர் தினத்திற்கு


முன்னிரவொன்றில்--நான்


அவனுடன் அந்த


அறையினுள் நுழைந்தேன்.






‘பொலிஸ் வந்தால்


புருஸன் என்று


ஏன்னையே சொல்"






மீசை மயிர்கள்


முகத்தில் உரச


நெருங்கி அமர்ந்தான்


அவன் முடிவெடுத்து விட்டான்






மூடிய கதவுக்குள்-எது


நடந்தாலும் வெளியே வராதென….






இனிச் சட்டையைக் கிழிக்கலாம்….


வாரினால் அடிக்கலாம்………


எச்சிலால் துப்பலாம்……….


பரிகாசப்படுத்தலாம்………..





இயேசுவைப் போலவே

பாடுகள் படுத்திக்

கொன்றும் போடலாம் .




இது பயணமுகவர்கள் காலம்





அதிஸ்டம் தேடி


அதிஸ்டமாய் வந்து


அதிஸ்டம் தொலைக்கிற


சீதைகள்!!!!!!!


முகவர்கள் வெட்டும்


இடுகாட்டுக் குழிகளில்…….

3 comments:

மதுரை சரவணன் said...

அருமை . கோபம் வரிகளில் தெரிகிறது. வாழ்த்துக்கள்

வாக்குமூலம் said...

நன்றி மதுராபுரி சரவணன் அவர்களே,மூன்று முறை பதிவிட்டு கவிதையை அங்கீகரித்திருக்கிறீர்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி!
ரமோனா

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment