Friday, October 2, 2009

அவர்கள் !!


அவர்கள் !!

மகாதேவன்கள்!!
எல்லாவேதங்களையும்
எழுதியதாய்ச்சொல்லும்
மகான்கள் !!


முற்றிலும்
உணர்ந்ததாய்
உனக்கு மூளைச் சலவை
செய்தவர்கள் !!


அவர்கள் இரு என்றால் இருக்கவும்...
அவர்கள் இற என்றால் இறக்கவும்....
மட்டுமே உனக்கு இங்கு உரிமை.


நீ எப்படி? எவ்வளவு,
காலம் வாழ்வதென்றும்....
என்னென்ன, எப்பொழுது?
நிகழுமென்றும்.....
உனக்காக - அவர்கள்
கணக்குப் போட்டுள்ளார்கள் !!


அவர்கள் அசைவின்றி
உன்னால் ஒரு கண
அசைவுமில்லை !
அவர்களுக்காகப் பேசவே
உன் நாவு!!
அவர்களுக்காகப் பார்க்கவே,
உன் கண்கள்!!

அவர்கள் குரல் கேட்கவே
உன் செவிகள் !!
அவர்களுக்காகச் சிந்திக்கவே
உன் மூளை !
அவர்களுக்காகச் சுவாசிக்கவே
உன் மூக்கு !


சலசலத்தெழுந்த பேராறுகள் கூட
சப்தமில்லாமல் கலந்த
சமுத்திரங்களில்...
புறவுலகம்,அகவுலகம்
சமூகம்...பிரக்ஞை...
முன் நவீனம்... பின் நவீனம்..
என்று கைமதுனத்தால்
விந்து பிறப்பித்துக்
கடல் பெருக்கெடுக்க வைக்கும்
சூட்சும மேதைகள் !!


இன்று - நீ
அவர்களுக்காக
எடுப்புத்தூக்கு!!

அவர்கள் நாலுவரி எழுதி - அதுவே
காப்பியம் என்பார்கள்...
உடனே தலையாட்டு !!

அவர்கள்
கிறுக்கித்தள்ளியவைதான்
கீர்த்தனை என்பார்கள்..
உரத்த குரலில் ஊளையிடு !


நேற்றைய கண்ணாடித் துண்டில்
அவர்களுக்காக வாழப்பிறந்த
உன் இன்றய முகம்
சப்தமில்லாமற் காணாமற்போவது
கண்டும் கலங்காதிருக்கிறாய் நீ...

No comments:

Post a Comment