Friday, October 2, 2009

உன்னோடு நான் வருவேன் !

உன்னோடு நான் வருவேன் !

உன்னோடு நான் வருவேன் !

சட்டைப்பை பொய் பேசாது....
சாத்திரமும் சம்பிரதாயமும்
பார்க்காது...
சாதிவகுத்துப் பிரித்து வைக்காது...
தன்னுள் விழும்
சதங்களையும், இலட்சங்களையும்...
சரிசமமாகச் சுமப்பது !

வெற்றுப்பையுடன் வந்து
இலட்சாதிபதியானோர் யார் ??
இலட்சாதிபதிகளாக வந்து
வெற்றுபையாகினோர் யார்??
சட்டைப்பைகள் மட்டுமே தெரிந்து
வைத்திருக்கிற இரகசியம் !

சட்டைப்பைகள் ஒருவேளை
பேசத் தொடங்கினால்..

சமூகத்தின் முதுகெலும்பெனும்
பல தலைகள் - தானாகவே
முகட்டு வளைகளில்ம
தூக்கு மாட்டிக்கொள்ளும்.

உளறுவாயர்கள் பலர்
ஊர் பேர் தெரியாமல் போய்விடுவர் !!

சல்லிக் காசுமற்று
சமூகத்தின் கண்பொத்திக்
காசுக்காரர்களாய் நடிக்கிற..
பேர்வழிகளை - துண்டுவிரித்துத்
தெருவோரம் உட்கார்த்திவைக்கும் !

ஒவ்வொருவர் போட்டு மிதித்த
பூக்களின் கணக்கும்....
பூஜைக்குப்போன பூமாலைகளின் கணக்கும்...அவரவர்
சட்டைப்பைகள் மட்டுமே
அறிந்து வைத்திருக்கிற விடயம் !!

யார் யாரோ பாவிகளுக்காக - பாவம்
சட்டைப்பைகள் தாங்களே
பாவக்கணக்கைச் சுமக்கின்றன !!
மூக்குப் பொடி டப்பா முதல்....
முகமூடித்திருடரின் துப்பாக்கிவரை...
தங்கிச் செஞ்சோற்றுக்கடன்
தீர்க்கும் கர்ணபரம்பரை -
இந்தச் சட்டைப்பைகள் !!

வட்டமாய், சதுரமாய், வடிவங்கள் மாறினாலும்
திட்டமாய் இதனைத் தேடித் திருடர்கள் வந்த போதும்...
கத்தியால் இதனை வெட்டிக் கையாடல் செய்த போது,ம்...

மனைவியர்,கணவன்மார்கள்,மக்கள் என்று எவருமே
வரமாட்டார் மரணநேரம்......
ஆனாலும்
மனிதனே உனக்காய் வந்து
மயானத்தில் அழியும் சட்டைபை !!!

No comments:

Post a Comment