Wednesday, October 28, 2009








நான்...
எப்போதும் போலவே
இப்பொழுதும்...

**தகடூரை அண்டிய அதிகமானின்
நெல்லிக் கனிக்காய்
அலைந்து,அலைந்து....
அங்கிருந்து இங்கும்,
இங்கிருந்து அங்குமாய்...

என்மனதிற்கும், எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!!

"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாம்"

பிணமலைக்குவியலின்,
சரிவுப்புறத்தில் ஒழிந்து
உயிர்தரித்தும்...

குருதி சேற்றுப் படிவினுள்
கால்கள் புதையப்புதைய
ஓடிய பொழுதிலும்...
இரவுபகலாய் எமனாய் விழுகிற
செல்லும்,துப்பாக்கி வேட்டும்,
மாடு குடிமனை மக்களின்
மேலாய் வெடிக்கிற போதிலும்...

ஒரே ஒரு கணத்துள் - என்
துணயாய் வந்தவன்
மண்டை பிளந்துயிர்
மரிக்கிற போதிலும்....

குருட்டுப் பிடிமானத்தோடு - என்
நெஞ்சு முனகும் !

"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாம்"

நான் எப்போதும் - போலவே
இப்போதும்....

என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான் !

கண்ணுக்கெதிரே,
கசக்கிமுகர்ந்து
பொசுங்கிப் போன - என் தமிழ்ப்
பெண்களை....
பச்சைக்குழந்தையின்
பிஞ்சுக் கழுத்தையும்
நசித்துயிர் மாய்த்த
அரக்கத் தனத்தை....
சேலை இடுக்கில் கத்தி சொருகி
மார்பினை அரிந்த
மாபாதகத்தை....

மண்ணினுள்ளே ஆளப்புதைந்தும்..
இறப்பரில் புகைந்தும்..
துடிக்கத்துடிக்க மரித்துபோன
உயிர்களை நினைக்கையில்
உஸ்ணப்பெருமூச்சோடு -என்
குரல் ஒலிக்கும்.

"ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லும்"

நான் எப்போதும் போலவே
இப்போதும்.....

அங்கிருந்து இங்கும்...
இங்கிருந்து அங்குமாய்...
என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும் மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!

- ரமோனா


நான் எப்போதும் - போலவே
இப்போதும்....

என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான் !

கண்ணுக்கெதிரே,
கசக்கிமுகர்ந்து
பொசுங்கிப் போன - என் தமிழ்ப்
பெண்களை....
பச்சைக்குழந்தையின்
பிஞ்சுக் கழுத்தையும்
நசித்துயிர் மாய்த்த
அரக்கத் தனத்தை....
சேலை இடுக்கில் கத்தி சொருகி
மார்பினை அரிந்த
மாபாதகத்தை....

மண்ணினுள்ளே ஆளப்புதைந்தும்..
இறப்பரில் புகைந்தும்..
துடிக்கத்துடிக்க மரித்துபோன
உயிர்களை நினைக்கையில்
உஸ்ணப்பெருமூச்சோடு -என்
குரல் ஒலிக்கும்.

"ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லும்"

நான் எப்போதும் போலவே
இப்போதும்.....

அங்கிருந்து இங்கும்...
இங்கிருந்து அங்குமாய்...
என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும் மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!

- ரமோனா

குறிப்பு:
**தகடூர்: அதிகமான் மன்னன் அரசாண்ட இடம். அதிகமான் நீண்ட காலம் உயிர் வாழும் சக்தி கொடுக்கும் நெல்லிக்கனி பெற்றவன்.

கருத்துக்கள் (3)
ஆயுதமொன்றே..
3 செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2009 12:36
ஈழவன்
உன்னைப் போலவே நானும்..
இன்னும் எரிகிற இனத்தில்
இறந்து கொண்டிருக்கிற வனத்தில்
என்ன செய்யப் போகிறோம்
ஏவுகணையும் எரிகுண்டும் இல்லாத போது..!

உன் கவிதையோடு ஈழம் வெல்லும்.
nettes Gedicht !
2 திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2009 14:42
sathees
nettes Gedicht Ramona.
erhält es aufrecht.
danke
அற்புதமான கவிதை !!
1 திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2009 14:16
செங்கோன்
"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாமா? --அல்லது
ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லுமா??

உண்மையில் ஒவ்வொரு இலங்கைத் தமிழனுக்குள்ளும் இன்றுவரை அறிந்து கொள்ள முடியாதிருக்கின்ற அல்லது புரிந்துகொள்ளமுடியாதிருக்கின்ற அர்த்தமுள்ள கேள்வி இது.. அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்.


No comments:

Post a Comment